யாழ்ப்பாணம் – புங்குடுதீவு – குறிகாட்டுவானில் பெருமளவு வைத்தியசாலை கழிவுகள் கரையொதுங்கி வருகிறது.
இந்திய மருத்துவ கழிவுகளே இவ்வாறு கரையொதுங்கிவருவதாகவும், அதனை உறுதிப்படுத்தும் வகையில் இலட்சினைகள், பெயர்கள் உள்ளதாகவும் அறியப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக யாழ்.நெடுந்தீவு, நயினாதீவு கரையோரங்களில் இவ்வாறான வைத்தியசாலை கழிவுகள் கரையொதுங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும் என மாகாண சுகாதார பிரிவினர் மற்றும் கடல்வள பாதுகாப்புடன் தொடர்புடையோர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது குறிகாட்டுவான் பகுதியில் மீண்டும் வைத்தியசாலை கழிவுகள் கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.